For Quick Alerts
For Daily Alerts
Just In
பெரியார் சிலை அகற்றப்படும்: எச். ராஜா மீது போலீஸில் புகார்
பெரியார் சிலை அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த எச்.ராஜா மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ
கோவை: பெரியார் சிலை அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றியது போல் நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று எச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு பெரியார் குறித்து கருத்து வெளியிட்ட எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
Comments
English summary
Thanthai Periyar Dravidar Kazhagam gives complaint on H.Raja on his controversial comment on Periyar.