பொத்தேரி தனியார் கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்! போலீஸார் ரெய்டில் 30 மாணவர்கள் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து காலையிலேயே குவிந்த போலீஸார், ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர்.

குறிப்பாக அந்த கல்லூரிக்குச் சொந்தமான ஆண்கள், பெண்கள் விடுதி, சுற்றியுள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் விடுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்லூரி வளாகம், விடுதிகள் என போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததாக அந்த கல்லூரியில் படிக்கும் 30 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநில மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே கல்லூரியை சேர்ந்த சில வட மாநில மாணவர்கள் நெடுஞ்சாலையில் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாணவர்களை சிறையில் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆங்காங்கே போதை பொருட்கள் ஒழிப்புக்கான ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இந்த சோதனை அதிகரித்து வருகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போதையால் பல வெறிச் செயல்களில் இளைஞர்களும் மாணவர்களும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications