கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் டிஎஸ்பி விசாரணை.. போலீசார் குவிப்பு
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் இன்றும் டிஎஸ்பி எட்வர்ட் விசாரணை நடத்தி வருகிறார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் டிஎஸ்பி எட்வர்ட் தலைமையில் விசாரணை தொடங்கியது. அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று நம்பி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதையடுத்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டது.

எது எப்படி இருந்தாலும் நாங்கள் செய்வதைத்தான் செய்வோம் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசின் முடிவால் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இதனால் கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் 9வது நாளாக இன்றும் ரிசார்ட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகக் கூறிய எம்எல்ஏ சரவணன், சசிகலா தரப்பினரால் கடத்தி செல்லப்பட்டு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று பிற்பகல் 12 மணியளவில் ரிசார்ட்டிற்கு சென்ற போலீசார் எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர், அங்குள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
இந்நிலையில், இன்று கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வந்த டிஎஸ்பி எர்வர்ட் அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ரிசார்ட்டில் போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications