ஆர்.கே நகர் தேர்தல்.. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு
அமைச்சர் செல்லூர் ராஜூ மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், ஆர்.கே நகர் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அதிகாரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. டிசம்பர் 10ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications