திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சு… தடியடி.. பெண்கள், குழந்தைகள் பீதி
திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை: திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இன்று அதிகாலை முதல் சென்னை மெரினாவில் போராட்டம் செய்த மாணவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில் இருந்து சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகள் போர் களம் போன்று சின்னாபின்னமாக காட்சியளிக்கிறது.

போராட்டத்தில் தொடர்ந்து நடத்த முயலும் மாணவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் மாணவர்கள் அங்கேயே இருந்து போராடி வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர்கள் சிலர் ஐஸ் அவுஸ் காவல்நிலையத்தில் தீ வைத்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் இப்பகுதியில் நிலவி வருகிறது.

இதனால், மீண்டும் கண்ணீர் புகை குண்டை போலீசார் வீசியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். கண்ணீர் புகை குண்டு வீச்சி, கல்வீச்சு, தடியடி என தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதியில் உள்ளனர். அனைவரும் வீட்டை தாழ் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications