மக்கள் கோபம் எதிரொலி... கூவத்தூர் முதல் கோட்டை வரை போலீஸ் குவிப்பு
கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டையிலும், கோட்டையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருவதால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சசிகலா ஆதரவாளர்கள் என கூறப்படும் 124 எம்.எல்.ஏக்கள், சென்னையை அடுத்த கூவத்துார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று காலை அங்கிருந்து சட்டசபை அமைந்துள்ள, கோட்டைக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.

இப்படி எம்.எல்.ஏக்கள் வரும்போது, கோபத்திலுள்ள பொதுமக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டையிலும், கோட்டையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காமராஜர் சாலையில், வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications