நம்பரை மாற்றி கர்நாடகாவுக்கு 36 டன் மணல் கடத்தல்.. லாரி பறிமுதல்
நம்பரை மாற்றி கர்நாடகாவுக்கு மணல் கடத்திச் சென்ற லாரி மற்றும் 36 டன் மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக சென்ற லாரியை பிடித்த போலீசார் அதில் இருந்த 36 டன் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் முதலமைப்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கிய போலீசார் அதன் ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில் லாரியில் கண்ணாடி கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார் ஆவணத்தில் உள்ள பதிவு எண்ணும் லாரியின் எண்ணும் மாறியிருப்பதைக் கண்டு லாரியில் இருந்த லோடை திறந்து பார்த்தனர். அதில் 36 டன் மணல் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்ததோடு ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. கடத்தப்பட இருந்த மணலின் மொத்த மதிப்பு 1.55 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து லாரியின் உரிமையாளரான ஆனந்த் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி விடுத்துள்ள அறிக்கையில் "கர்நாடகா மாநிலத்திற்கு மணல் கடத்தும் கும்பலுக்கு வருவாய் துறையும் போலீசாரும் உறுதுணையாக இருக்கின்றனர். திருச்சி, கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல், சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை செய்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில், அனைத்து மணல் லாரி உரிமையாளர்களையும் திரட்டி மண்ல கடத்தலில் ஈடுபடும் லாரிகளை சிறைபிடித்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக, நாளை நாமக்கல்லில் நடக்கும் மாநில செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications