ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைப்பு

ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் பேச்சு வார்த்தைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் கார் ஓட்டுநராக இருக்கிறார் மணிகண்டன். இவரது சொந்த ஊர் நெல்லை. இவர் காரில் சீட் பெல்ட் போடவில்லை என்று வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாக்கி இருக்கிறார்.

Police gives driver Manikandan's body to his family

இவருடன் சேர்ந்து இன்னும் மூன்று போலீஸ் இவரை தாக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்தார்.

இதனால் மணிகண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 59 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

மணிகண்டன் உடலை முதலில் அவரது உறவினர்கள் வாங்க மறுத்தார்கள். அவரின் நண்பர்கள் போலீசிடம் வாக்குவாதம் செய்தார்கள்.

இந்த நிலையில் போலீஸ் மணிகண்டன் உறவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

போலீஸ் பேச்சு வார்த்தைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மணிகண்டனின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதி சடங்கு நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+