For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புச்செழியன் வெளிநாடு தப்பாமல் இருக்க அதிரடி.. லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது காவல்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மற்றும் நடிகருமான சசிகுமாரின் அத்தை மகனும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தவருமான அசோக் குமார், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், பைனான்சியர் அன்புச்செழியனின் அட்டூழியங்களால்தான் தற்கொலை செய்ததாக கூறியிருந்தார்.

Police issued look out notice against financier Anbuchezhiyan

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய பிரிவின்கீழ் வளசரவாக்கம் போலீசார் அன்புச்செழியனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்புச்செழியனுக்கு அரசியல் ஆதரவு உள்ளதால் போலீசார் இன்னும் அவரை தேடி வருவதாக கூறி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு லுக்அவுட் நோட்டீசை காவல்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வெகு பிரபலமான ஒரு நபரை இன்னும் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

English summary
Police issued look out notice against financier Anbuchezhiyan who is absconding since a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X