அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக காசிமேடு மீனவர்கள் கொந்தளிப்பு - போலீஸ் தடியடி
அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக காசிமேட்டில் மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். மீனவர்கள் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்கள் சாலை மறியல், போலீஸ் தடியடி-வீடியோ
சென்னை: தடை செய்யப்பட்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக புகார் கூறி காசி மேடு மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் காசிமேடு பகுதியே போர்க்களமானது.

அதிவேக எஞ்சினைக் கொண்டு விசைப்படகுகளில் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்பது காசிமேடு மீனவர்களின் புகார். அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள்தான் இந்த படகுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காசி மேட்டில் மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் காசிமேடு பகுதியே போர்க்களமானது.













Click it and Unblock the Notifications