ஸ்டெர்லைட் புரட்சி- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி-போலீஸ் துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

    ஆட்சியரிடம் முறையிடுவதற்காக தூத்துக்குடி அலுவலகத்தை முற்றுகையிட பேரணி நடத்த மக்கள் முயற்சித்தனர். அவர்களை போலீஸார் மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தினர்.

    கல்வீச்சு

    கல்வீச்சு

    அப்படியும் போலீஸாரை மீறி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    போராட்டக்களம்

    போராட்டக்களம்

    போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடியே போராட்டக்களமாகியது.

    கண்ணீர் புகை குண்டு

    கண்ணீர் புகை குண்டு

    இதையடுத்து போலீஸார் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.

    ஊழியர்கள் தப்பி ஓட்டம்

    ஊழியர்கள் தப்பி ஓட்டம்

    துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+