For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரினாவில் இடம் கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. பதற்றம்!

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் இடம் ஒதுக்க கூறி போராட்டம் நடத்தும் திமுகவினர்

    சென்னை: மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Police latti charge on DMK cadres

    இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனை முன்பு காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டினர் .

    அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Police latti charge on DMK cadres for violeting in front of Kauveri hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X