மெரினாவில் இடம் கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. பதற்றம்!
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
Recommended Video
சென்னை: மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை முன்பு காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டினர் .
அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பதற்றம் ஏற்பட்டுள்ளது.