For Daily Alerts
Just In
ஓ.பி.எஸ். காரிலிருந்து சைரன், லச்சினை அகற்றம்.. போலீஸ் பாதுகாப்பும் வாபஸ்!
ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்த சைரன் மற்றும் அரசு லச்சினை அகற்றப்பட்டது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்த சைரன் மற்றும் தமிழக அரசின் லச்சினை அகற்றப்பட்டது. அவரது வீட்டிற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 13வது முதல்வராக சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏவும் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சமி இன்று பதவியேற்றார். புதிய முதல்வர் பதவியேற்கு முன்பு இதுவரை காபந்து முதல்வராக நீடித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.
அரசு லச்சினையும் காரில் இருந்து அகற்றப்பட்டது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் முதல்வராக இருந்த போது அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வீடும் சசி குரூப்பால் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
Comments
English summary
Edappadi Palanichany sworn as the Chief Minister of Tamil Nadu. After this Police protection has been withdrawn From OPS home. siren and mark also laccinnai also rmoved from ops car.
Story first published: Thursday, February 16, 2017, 17:35 [IST]