For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த டோக்கன் போட்ட அபிராமி... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிரடி வாக்கு மூலம்

    சென்னை: கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த அபிராமி டோக்கன் போடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவருக்கு சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    வாகனத்தை எடுத்துக் கொண்டு

    வாகனத்தை எடுத்துக் கொண்டு

    கணவரும், குழந்தைகளும் இருக்கும் வரை சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்த அபிராமி, தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார். பின்னர் வாகனத்தை எடுத்து கொண்டு எங்கோ சென்றுவிட்டார்.

    எஸ்எம்எஸ்

    எஸ்எம்எஸ்

    இதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்க்கும் அவரது உறவினர்களுக்கும் அபிராமியின் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் குழந்தைகளே போய்விட்டனர். இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டிருந்தார்.

    வெளியூருக்கு தப்பிய அபி

    வெளியூருக்கு தப்பிய அபி

    இதன் பிறகு இந்த செல்போன் சிக்னல் கோயம்பேட்டில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற அபிராமி கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என யூகித்தனர்.

    சிசிடிவி காட்சிகள்

    இதையடுத்து கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த டோக்கன் போடும் கவுன்ட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அபிராமி வாகனத்தை நிறுத்தி டோக்கன் போடும் காட்சிகள் இருந்தன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    English summary
    Police releases CCTV video of Abirami who parked her vehicle in CMBT after she kills children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X