காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பெண் எஸ்.ஐ- கோவையில் பரபர!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அன்னூரில் பிறந்த நாளன்று பெண் எஸ்.ஐ ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று கோவை அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 46 வயதான பெண் உதவி ஆய்வாளர் ஹேமலதா என்பவர் தற்கொலை செய்து கொண்டர். காவல்நிலையத்தில் விஷ மாத்திரை சாப்பிட்ட ஹேமலதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று காவல்நிலையத்தில் கணவருடன் ஹேமலதா நீண்ட நேரம் பேசியுள்ளார். கணவருடன் பேசிய பின்னர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.46 வயதான பெண் உதவி ஆய்வாளர் தற்போது 2 ஆவது கணவருடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications