சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி... போயஸ் தோட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் எதிரொலியாக சசிகலா வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் மறைந்த நிலையில் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் தலை எழுத்தை மாற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அவரது முதல்வர் கனவை தகர்த்துள்ளது. தற்போது, அவரது பொதுச் செயலாளர் பதவியே இருக்கமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி ஒரு பதற்றமான சூழலில் சசிகலா வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வேதா இல்லம்
போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த காலத்தில், அவர் முதல்வராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி போலீசார் எப்போது குவிக்கப்பட்டிருப்பார்கள். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பக்கம் மக்கள் செல்லவே அச்சப்படுவார்கள்.

சசி வசம்
ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்தார். தொடக்கத்தில் அவர் எந்தப் பொறுப்பில் இல்லாததாலும், ஜெயலலிதா மறைந்துவிட்டதாலும், போலீசார் முற்றிலுமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

போலீசார் குவிப்பு
மீண்டும் ஆட்சி அதிகாரம் சசிகலா வசம் வரும் என்று அரசியல் சூழல்கள் மாறிய நிலையில் மீண்டும் போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா உயிரிருடன் இருந்த போது போலீசாரால் என்னென்ன பிரச்சனைகள் பொதுமக்களுக்கு ஏற்படுமோ அதெல்லாம் சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னரும் வரத் தொடங்கியது.

பாதுகாப்பு வாபஸ்
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சசிகலா எப்போது வேண்டுமானாலும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் தள்ளப்படலாம் என்ற நிலையில் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications