புருஷனை மதுவில் மூழ்க விட்டு கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கணவரின் மதுப் பழக்கத்தை வசதியாக எடுத்துக் கொண்டு அவருக்கு மதுவைக் கொடுத்து எப்போதும் போதையிலை வைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் தலையிட்டு பிரித்து விட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபம் விராலிகாட்டுவிளையை சேர்ந்தவர் கில்பர்ட் (32). இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த கில்பர்ட்டுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தொடர்பு ஏற்பட்டது.

கில்பர்ட்டின் கள்ளக்காதலியின் கணவர் குடிக்கு அடிமையானவர். எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார். இது கில்பர்ட்டுக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் வசதியாகி விட்டது. கணவருக்கு மதுவை வாங்கிக் கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு கள்ளக்காதலருடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார்.

கணவர் ஒரு அறையில் மயங்கிப் போய்க் கிடப்பார். மறு அறையில் கள்ளக்காதலர்கள் கும்மாளம் போடுவார்களாம். நாளடைவில் தனது காதலி வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விட்டார் கில்பர்ட். தனது மனைவியை மறந்தார். குடும்பத்தை மறந்தார்.

இதனால் வேதனை அடைந்த கில்பர்ட்டின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் கில்பர்ட்டையும், அவரது கள்ளக்காதலியையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். இருவருக்கும் அறிவுரை கூறி பிரிந்து போகச் செய்தனர். இதை ஏற்று கில்பர்ட் தனது மனைவியுடன் கிளம்பிப் போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+