கூவத்தூரில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது.
இதுவரை போயஸ்கார்டனில் தங்கியிருந்த சசிகலா தீர்ப்பு அறிவிப்புக்கு முந்தைய நாளான நேற்றிரவு சென்னைக்கு வெளியே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கினார். அங்கு மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்டுள்ள ஏராளமான குண்டர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரிசார்ட்டுக்குள் நுழைந்த அதிரடிப்படை
இந்நிலையில் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினரும் ரிசார்ட் பகுதியில் இறக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூரில் பதற்றம்
50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திறங்கிய காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூவத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மன்னார்குடி கும்பல் பீதி
போலீசார், அதிரடிப்படையினர் குவிப்பால் சசிகலா கைது செய்யப்படுவார் என தகவல் பரவியது. இதனால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசியலில் பரபரப்பு
சசிகலாவால் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களும் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications