மன அழுத்ததினால் மரத்தில் தூக்குப் போட்டு போலீஸ்காரர் தற்கொலை – மனைவி, மகன், 2 மகள்கள் அதிர்ச்சி!
நாகை: மன அழுத்தம் காரணமாக, நாகை மாவட்டத்தில் காவல்நிலையத்தின் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரால் அவருடைய மனைவி, பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கரியாப்பட்டிணம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆறுமுகம், இன்று காலை காவல்நிலையத்தின் பின்னால் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்டார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.
ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி தெரிவித்தபோது, "1994 இல் போலீஸ்காராக பணியில் சேர்ந்தார். இவரது நடவடிக்கை சரியில்லை என்று கூறி சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
99 இல் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கரியாப்பட்டிணம் காவல்நிலையத்தில் பணி செய்யுமாறும், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடையாது என்று சொல்லிவிட்டனர்.
தன்னுடன் பணியில் சேர்ந்தவர்களும், தனக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டியுள்ளது என்று தினமும் புலம்பிக்கொண்டிருப்பார்.
குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்பதால் வேறு வழியில்லை வேலைக்கு செல்லுங்கள் என்று நான் சொல்லி வந்தேன். வேறு காவல்நிலையத்திற்காவது மாற்றுங்கள் என்று மேலதிகாரிகளிடம் கேட்டு வந்தார்.
இந்தநிலையில் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இனி 3 குழந்தைகளை வைத்து எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications