ஜெ. விடுதலை... நீதித்துறை மீதான நம்பிக்கைக்கு சறுக்கல் என தலைவர்கள் கருத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதற்கு கூட்டணி கட்சித் தலைவா்கள் வரவேற்பு தொிவித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா விடுதலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
தீர்ப்பினுடைய முழுமையான நகல் கிடைத்தப் பிறகு அதில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்து கருத்து சொல்லலாம்.
ஆனால் பெங்களுருவில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே..நாகராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
18 ஆண்டு காலம் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனையையும், அபராதமும் விதித்தார்.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பைப் படித்த சட்டநிபுணர்களும், அரசியல் ஆய்வாளர்களும், குன்ஹாவின் தீர்ப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, முறையாக பரிசீலிக்கப்பட்ட சரியான தீர்ப்பு என்று கூறியிருந்தனா்.
இதிலிருந்து ஜெயலலிலதா உள்ளிட்டோர் தப்பிக்க இயலாது என்று கூறப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை என்ற தீர்ப்பு நடுநிலையான, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊழல் செய்தாலும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தைரியத்தை ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தீா்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.
நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications