சாதிகளை துறந்து தமிழன் என்கிற ஒரே குடையின் கீழ் வர வேண்டும்.. கச்சநத்தம் கொலை குறித்து பாரதிராஜா!
கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன வேதனை அளிப்பதாக இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன வேதனை அளிப்பதாக இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மே 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கருப்பணசாமி கோயில் திருவிழாவைக் கொண்டாடினர்.
அப்போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், கோயில் மரியாதை கொடுப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

3 பேர் கொலை
இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் கருத்து
இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் வலியுறுத்தல்
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. கச்சநத்தம் பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.‘ இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

சீமான் கருத்து
இதுதொடர்பாக பேசிய சீமான், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினாலும் மாற்றுத்திறனாளியாக வாழும் சூழல் உள்ளது.
சாதியரீதியிலான மோதல்களை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

பாரதி ராஜா கோரிக்கை
இயக்குநர் பாரதி ராஜா, கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனவேதனை அளிக்கிறது. சாதிகளை துறந்து தமிழன் என்கிற ஒரே குடையின் கீழ் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications