ஜல்லிக்கட்டு போராட்ட களம்போல மாறிய பொள்ளாச்சி.. விரட்டியடித்த போலீஸ்.. அசையாத மாணவ, மாணவிகள்
Recommended Video

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்திய கல்லூரி, மாணவ மாணவிகள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை உலுக்கிய பயங்கர பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேரை மட்டும் காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே, இன்று சுமார் ஆயிரம், கல்லூரி, மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இன்று காலை முதல் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், டிஎஸ்பி ஜெயகுமார் நேரடியாக வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் காவல்துறையின் சமாதானப் பேச்சுவார்த்தையில், மாணவ-மாணவிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் திடீரென அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தண்ணீரை பீச்சி அடிக்க கூடிய வஜ்ரா வாகனங்கள் , கலவரத்தை கலைக்கக்கூடிய வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு மனித சங்கிலி போல அமைத்துக் கொண்டு, கலைய மாட்டோம், கலைய மாட்டோம் என கோஷமிட்டனர். ஆனால் , காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மாணவ, மாணவிகளை பிடித்து இழுத்துத் தள்ளி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் உடனடியாக மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர் . பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக தான் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால், மாணவ மாணவிகளை மிக மோசமாக காவல்துறை கையாண்டு விரட்டியடித்து உள்ள சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு கால கட்டத்தில், நடத்தப்பட்ட போராட்டங்களை நினைவுபடுத்துவதை போல இருந்தது இந்த சம்பவம்.
நாளை இன்னும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர், மாணவ, மாணவிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications