மீண்டும் 'லைம் லைட்'டுக்கு வந்த 'ஒரிஜினல் மதுரை ஸ்டிராங்மேன்' பொன் முத்து... அழகிரியின் பரம வைரி!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் பல காலமாக கடுமையான பைட் கொடுத்து வரும் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைம்லைட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இவருக்கு எம். பி சீட் கிடைக்க மு.க.ஸ்டாலினே காரணம் என்று கூறப்படுகிறது. இவரைத்தான் தனது தேனி வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.
நீண்ட காலமாகவே மதுரையில் அழகிரிக்கு கடும் போட்டியாளராக இருந்து வருபவர் பொன் முத்துராமலிங்கம்.

எம்.ஜி.ஆர். காலத்து ஸ்டிராங் மேன்
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மதுரையில் திமுகவைக் கலக்கியவர் பொன் முத்துராமலிங்கம்தான்.

அதிமுகவுக்கு முத்து.. திமுகவுக்கு பொன் முத்து
மதுரையில் அதிமுகவுக்கு முத்து ஸ்டிராங் மேனாக இருந்தார் என்றால் திமுகவுக்கு பொன் முத்துராமலிங்கம் என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் மதுரை திமுகவில் கோலோச்சியவர் பொன் முத்து என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படும் பொன் முத்துராமலிங்கம்.

மதுரை மேற்கு என்றாலே முத்துராமலிங்கம்தான்
மதுரை மேற்குத் தொகுதி என்றாலே அது பொன் முத்துராமலிங்கமாகத்தான் ஒரு காலத்தில் இருந்தது. அந்த அளவுக்கு அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக வலம் வந்தவர் பொன் முத்து.

மாஜி அமைச்சர்
கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய இலாகாவை வகித்துள்ளார். 2 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

'கிரி'யுடன் மோதிய பொன் முத்து
அழகிரி என்ற பெரிய மலையுடன் மோதி அரசியல் செய்தவர் பொன் முத்துராமலிங்கம். ஆனால் ஒரு கட்டத்தில் பொன் முத்துவும், அழகிரியும் நெருக்கமாக இருந்தவர்களும் கூட.

பார்த்து பார்த்து ஓரம் கட்டிய அழகிரி
தான் மதுரைக்கு வந்து செட்டிலானபோது மதுரையில் பெரும் பிரபலமாக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், செ. ராமச்சந்திரன், பொன். முத்துராமலிங்கம் ஆகியோருடன் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்து பின்னர் அவர்களை படிப்படியாக ஓரம் கட்டி ஒதுக்கி வைத்த பெருமைக்குரியவர்தான் அழகிரி.

ஸ்டாலினால் கிடைத்த சீட்
இந்த நிலையில் தற்போது அழகிரி கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டு விட்டதால், பொன் முத்துராமலிங்கத்தை மீண்டும் லைம்லைட்டுக்குக் கொண்டு வந்துள்ளது திமுக. அவருக்கு தேனி சீட்டைக் கொடுத்துள்ளனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்கிறார்கள்.

மதுரைக்கு வக்கீல் வேலுச்சாமி
அதேசமயம், மதுரை சீட்டை வக்கீல் வேலுச்சாமிக்குக் கொடுத்துள்ளனர். இவரும் கூட அழகிரியால் ஓரம் கட்டப்பட்டவர்தான். இவருக்கு தேர்தல் புதிதிதல்லை. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். இதுவரை அழகிரி வசம் இருந்து வந்த மதுரை தொகுதியை வேலுச்சாமி வசம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications