கோவண சாமியை கும்பிட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வசித்து வரும் கோவணச் சாமியார் என பக்தர்களால் அழைக்கப்படும் ராஜ்குமார் சாமியாரை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆசி பெற்றார்.

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்கள், ஜோசியர்கள், மந்திரவாதிகளுக்கும் இடையே எப்போதுமே நல்ல உறவு இருக்கும்.

தேசிய அளவிலும் சரி, மாநிலஅளவிலும் சரி ஜோசியர்களுக்கு அரசியல்வாதிகளிடையே எப்போதுமே நல்லமதிப்பு இருக்கும்.

கிவ் அண்ட் டேக் பாலிசி:

தமிழகத்திலும் சில அரசியல் தலைவர்கள் இப்படிப்பட்ட ஜோசியர்கள், சாமியார்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர்.

கோவணச் சாமியார்:

இந்த நிலையில் மத்திய அமைச்சராகியுள்ள பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு சாமியாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவரது பெயர் கோவணச் சாமியார்.

"அது" மட்டும்தானாம்:

இவர் வெறும் கோவணம் மட்டுமே கட்டுவார் என்பதால்தான் இந்தப் பெயராம். இவரது உண்மையான பெயர் ராஜ்குமார்.

நிர்வாணச் சாமியின் சீடர்:

இவர் மன்னார்குடியில் வசித்து வரும் நிர்வாணச் சாமியாரின் பிரதம சீடராக இருந்தவராம். கட[ந்த 5 வருடமாக கார்காவயல் கிராமத்தில் கோவில் கட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

மலர் கீரிடம், பரிவட்டம்:

இவரைத்தான் தற்போது பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆசி பெற்றார். அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மலர் கிரீடமும் சூட்டினார் சாமியார்.

அவருக்கு பைத்தியம்:

இப்படித்தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், அப்பா பைத்தியசாமி என்ற சாமியார் மீது உயிரையே வைத்துள்ளார் என்பது முக்கியமானது.

இவருக்கு கோவணம்:

பைத்தியசாமியின் உத்தரவு கேட்காமல் ஒரு வேலையும் செய்ய மாட்டாராம் ரங்கசாமி. அப்படித்தான் இப்போது பொன்ராவும் கோவண சாமியிடம் ஆசி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+