வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜக கைகூலிகள் என வைகோ கூறியதற்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜக கைகூலிகள் என வைகோ கூறியதற்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவர் கடுமையாக சாடினார்.

Pon Radhakirshnan slams Vaiko

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தன்மீது கல்வீசியது பாஜக கைகூலிகள் தான் என வைகோ கூறியதற்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என அவர் எச்சரித்தார்.

தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் சாடினார். தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஆலைகளை உடனே மூடவேண்டும் என்றால் சாத்தியமில்லை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+