முதல்வரின் அறிவிப்பு மக்களுக்கு ஆறுதல் தரும்.. பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
தமிழகத்தை சில நாட்களுக்கு முன்பு தாக்கிய ஓகி புயலுக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். அதன்படி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரண தொகையாக 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை எப்போதும் கைவிடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல, புயலால் உயிரிழந்தவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications