மன்னிப்பு கேட்பதினால் வைரமுத்துவுக்கு என்னவாகிவிட போகுது... பொன்னார் கேள்வி
ஆண்டாள் விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதினால் வைரமுத்துவுக்கு என்னவாகிவிட போகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

திருச்சி: ஆண்டாளை தன் தாயாக போற்றுவதாக கூறும் வைரமுத்து, தாயிடம் மன்னிப்பு கேட்பதால் தரம் தாழ்ந்து விடுமா என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.

இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுக்கிறது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கு தாய்ப்பால் கொடுத்து ஊட்டி வளர்த்த தாயை போல் தமிழ்ப் பால் கொடுத்து ஊட்டி வளர்த்த ஆண்டாளும் தனக்கு ஒரு தாய்தான் என்றும் தனது தாயை சிறுமைப்படுத்தி பேசுவேனா என்றும் கேள்வி எழுப்பிய வைரமுத்து, தான் கூறிய வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கூறி விளக்கமளித்தும் பலனில்லை.
வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் கெடு விதித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் தன் தாய்க்கு நிகராக ஆண்டாளை மதிப்பதாக கூறும் வைரமுத்து, அந்த தாயிடம் மன்னிப்பு கேட்பதால் அவரின் தரம் தாழ்ந்து விடாது என்றார்.
ஜீயரின் சோடா பாட்டில் வீச்சு கமென்ட் குறித்து அமைச்சர் பொன்னார் கூறுகையில், அவர் நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். சோடா குடித்து விட்டு பாட்டிலை வீசிதானே எறிவோம், அந்த அர்த்தத்தில் கூறியிருப்பார் என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications