1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் மகளிர் அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாற்றம் தேவை
''தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடக்கிறது. மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். இந்த உற்சாகத்தை பார்க்கும் போது மாற்றம் தேவை என்பது தெரிகிறது.

அதிக இடங்களில் வெல்லும்
நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு முழுவதும் அதிக இடங்களை கைப்பற்றும்.

1 லட்சம் ஓட்டு வித்தியாசம்
கன்னியாகுமரி தொகுதியில் நான் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 4, 5 நாட்களாக தமிழக மக்களை ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல அ.தி.மு.க.வினரும், காங்கிரசாரும் விலைக்கு வாங்கினார்கள். ஆனால் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
பணப்பட்டுவாடா
இன்று கூட கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மேக்கா மண்டபம் பகுதியில் வாக்குசாவடி அருகே நின்று கொண்டு ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பதாவும், அதற்கு போட்டியாக காங்கிரசாரும் பணம் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை தீவிரமாக நடந்தது. ஆனால், கடந்த 4, 5 நாட்களாக வாகன சோதனையே நடத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையம் தேவையா
புகார் தெரிவித்தால் அதற்கான ஆதாரத்தை நீங்களே கொண்டு வாருங்கள் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் காற்றை விட வேகமாக சென்று நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த சம்பவங்களை தடுக்க முடியும். இந்த தேர்தலில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
எஸ்.வி.சேகர்
பாஜக பிரசாரகுழுவின் செயலாளர் எஸ்.வி.சேகர், மந்தைவெளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் மனைவி, மகன், மகள்கள், தாயார் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.
இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர்
தென்காசி மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியும் தற்போதைய வேட்பாளருமான லிங்கம் ராஜபாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் வாக்களித்தார்.
செங்கோட்டையில் செந்தூர் பாண்டியன்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். ஆண்கள் நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications