மோடியை அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது - பொன். ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர்: பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் வந்த பொன். ராதாகிருஷ்ணன் அங்கு முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் நரேந்திர மோடியை பற்றி அவதூறாக பேசி வருவதை ஏற்க முடியாது.
ஆவேச அரசியல் நடத்தலாம். ஆனால் ஆவேச அரசு நடத்தக்கூடாது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளார்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி அமர்வதற்கு இருக்கை அமைத்து கொடுத்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும்.
திருக்குறள் போன்று பாரதியார் பாடல்களையும் இந்தியா முழுவதும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நடிகை குஷ்பு வந்த பிறகு தான் இன்று காங்கிரஸ் கட்சியே தெரிகிறது. ஆனால் அவர் காந்தியாகவோ, காமராஜராகவோ ஆக முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.