சென்னைக்கு வந்த ஜவடேகர் யாரையும் சந்திக்கவில்லை.. சொல்கிறார் பொன். ராதா
சென்னை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்திருந்தபோது எந்தத் தலைவரையும் சந்தித்துப் பேசவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜவடேகர் சென்னைக்கு ரகசிய பயணமாக வந்திருந்தார். தமிழக தலைவர்களுக்குக் கூட தெரியாமல் வந்திருந்தார். சென்னையில் ரகசியமான முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டது.
ஆனால் அப்படி அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று தற்போது பொன். ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆயிரக்கணக்கில் விருப்ப மனுக்கள்
இது வரை இல்லாத அளவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். அதன் பிறகு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் அமைவதை பொறுத்து பிற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை.

திமுக
திமுக காங்கிரஸை வெறும் ஒப்புக்காகவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. நால்வர் அணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

அதிமுக
அதிமுக தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி அமைப்பதில் பாஜக அவசரமே காட்டாது. நிதானமாகத் தான் செயல்படும். பாஜக எந்த நடவடிக்கையையும் திரைக்கு பின்னால் செய்யாமல் அனைவருக்கும் தெரியும்படி தான் செய்யும்.

தேமுதிக
தேமுதிக பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா என யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எந்த அரசியல் தலைவரையும் சந்தித்து பேசவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அது காங்கிரஸை கூட்டணியில் வைத்துக் கொள்ளுமா அல்லது தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளால் தேர்தலில் என்ன விளைவு ஏற்படுமோ என கருதி கழற்றிவிடுமா என தெரியாது. திமுக வெற்று சுமையை சுமக்கும். எந்த கட்சியின் நிலைப்பாட்டிற்காகவும் காத்திருக்காமல் பாஜக தனது தேர்தல் பணிகளை தொடர்ந்து செய்யும்.












Click it and Unblock the Notifications