அசத்தும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று ரசிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கிய சற்று நேரத்தில் அதனைக் காண மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் ராகவா லாரன்ஸ் விழாவிற்கு வருகை தந்தார்.
அலங்காநல்லூர்: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் லாரன்ஸ். அது மட்டுமல்லாமல் போராட்டத்தின் முடிவில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போதும் லாரன்ஸ் அவர்களை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறும் கூறினார்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டார். ஜல்லிக்கட்டு போட்டி சரியாக 8 மணிக்கு தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் லாரன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்து போட்டியை பார்வையிட்டு வருகிறார்.
நடிகர் லாரன்ஸ் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு விழா மேடையில் அமர வைக்கப்பட்டார். அங்கு அமர்ந்து சீறி வரும் காளைகளையும் அதனை பிடிக்கும் மாடுபிடி இளைஞர்களையும் கண்டு ரசித்தார்.












Click it and Unblock the Notifications