தமிழகம் நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லையாம்.. சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் தெளிவான முடிவுகளை எடுக்கிறார், நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் இடையேயுள்ள பறக்கும் சாலை திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் கட்டப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தது.

இத்திட்டம் ரூ. 1815 செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 17 கி.மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும். இப்போது பறக்கும் சாலை மதுராந்தகம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம், தாம்பரம்-செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம் ஆகிய இரண்டும் அறிவிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இத்திட்டங்கள் உதவும் என்று கருதப்படுகிறது என்று கூறினார்.
மேலும் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். காலம் தாழ்ந்தவை என்றாலும் வரவேற்கிறேன். நீட்தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்காததற்கு ஆட்சியாளர்களே காரணம் என குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் கூறினார்.
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் தெளிவான முடிவுகளை எடுக்கிறார், நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications