மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த்தான்.. பொன்னார் பொளேர்!
Recommended Video

சென்னை: மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது. தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நான் முதல்வரானால், முதல்வர் போல நடிக்க மாட்டேன். பதவிக்கேற்ப நடந்து கொள்வேன். ஊழலை ஒழிப்பேன் என்று சரமாரியாக பேசியுள்ளார்.

இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
[ஜெயலலிதா வெற்றிக்கு 'அணிலாக' உதவிய விஜய்.. அதிமுக ஆட்சியையே இப்போது விமர்சனம் செய்வது ஏன்? ]
அப்படி சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன். அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது; மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்தான்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுக எதிர்ப்பது வேலையற்றவர்களின் வேலை ஆகும். புறம்போக்கு நிலம் போல நாதியில்லாத நிலையில் தமிழ்நாடு உள்ளது என்கிற சிந்தனையுடன் நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications