ஜல்லிக்கட்டு இல்லை, பொங்கலுக்கு விடுமுறை ரத்து, அடுத்து அதுவா?: அழகிரி மருமகள் கொந்தளிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்தை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மருமகள் அனுஷா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் மாற்றாந்தாய் நடவடிக்கையை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மருமகள் அனுஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
No more #jallikattu ... pongal not a holiday anymore .... what next Tamil shouldn't be second language in the education system in TN ?!??
— anusha dhayanidhi (@anushadhaya) January 9, 2017
ஜல்லிக்கட்டு கிடையாது... இனி பொங்கலுக்கு விடுமுறை இல்லை...அடுத்ததாக தமிழக கல்வி முறையில் தமிழ் இரண்டாம் மொழியாக இருக்கக் கூடாது என்பார்களா? என தெரிவித்துள்ளார்.