தபால் ஓட்டு போடாதவர்கள் மே 16 அன்று தங்கள் ஓட்டைப் பதிவு செய்யலாம் – பிரவீன்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தபால் ஓட்டு போடாதவர்கள் மே 16 ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்களின் ஓட்டை செலுத்தலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "மண்டல தேர்தல் அதிகாரியிடம் தபால் ஓட்டை அளிக்கலாம். தகுந்த சோதனைக்கு பின்னரே தேர்தல் அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோர்ட் உத்தரவின் பேரில் ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்படும்.தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில்இருந்து நீக்கப்படுவதுடன், அவர்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
மறுஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்" என்று பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications