For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சையில் தபால் ஓட்டுகள் இருந்த பெட்டி சாவி மாயம்: அதிமுக கைவரிசை என திமுக குற்றச்சாட்டு

By Siva
Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சாவூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவியை அதிமுகவினர் மறைத்து வைத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதிக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும், அதிமுக சார்பில் ரெங்கசாமியும் போட்டியிட்டனர்.

Postal vote: DMK accuses ADMK of hiding postal vote box key

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகள் எண்ணும் பணி துவங்கியதும் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி காணாமல் போனது. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் பணி தாமதமானது.

பின்னர் சாவி கண்டுபிடிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் அதிமுகவினர் வேண்டும் என்றே சாவியை மறைத்து வைத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.

தஞ்சையில் அதிமுகவுக்கு 44 தபால் வாக்குகளும், திமுகவுக்கு 1 வாக்கும் கிடைத்துள்ளது.

English summary
DMK has accused ADMK of hiding the key of the box in which postal votes were kept in Tanjore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X