முதல்வராக பதவி ஏற்ற கையோடு ஓ.பி.எஸ்.ஸுக்கு காத்திருக்கும் 'பவர்' பிரச்சனை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளதால் மாநிலத்தில் மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உலையில் சோதனை முறையில் செய்யப்படும் மின் உற்பத்தியில் தமிழகத்திற்கு தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.

இந்நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சோதனை காரணமாக நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி வரும் 6ம் தேதி தான் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால் அறிவிக்கப்படாத மின் தடைகள் ஏற்படுகிறது. இதில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்திற்கு மின் பற்றாக்குறையை சமாளிக்கும் பிரச்சனை தயாராக உள்ளது. இதற்கிடையே மின் பற்றாக்குறையை சமாளிக்க அனல் மின் நிலையங்களில் முழு அளவிற்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications