பராமரிப்பு பணி... கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்: ‘மின்தடை’ பயத்தில் மக்கள்!
நெல்லை: கூடங்குளம் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தியை ஒரு மாதம் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் 13 ஆயிரம் கோடி முதலீட்டில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் பணிகள் நிறைவடைந்ததால் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி மின் உற்பத்தி தொடங்க அனுமதி அளித்தது.

மின் உற்பத்தி...
இதை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி முதல் அணு உலை பிளவுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு உலையில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

கண்காணிப்பு...
தொடர்ந்து மின் உற்பத்தி அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இதை ரஷ்ய-இந்திய அணு விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.

உயர்வு....
கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் அணு உலையில் 570 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் மே 5ம் தேதி மின் உற்பத்தி 900 மெகா வாட்டை எட்டியது. பின்னர் 1000 மெகா வாட்டை எட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்தன.

சாதனை...
ஜூன் 1ம் தேதி பிற்பகல் கூடங்குளம் அணு மின் நிலையம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

பரிசோதனை...
முழு அளவில் மின் உற்பத்தி தொடங்கிய போதிலும் அணு சக்தி ஓழுங்கு முறை வாரியம் தொடர்ந்து ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வந்தது. இதற்காக அவ்வப்போது அணு உலையை நிறுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வந்தன.

ஓராண்டு நிறைவு...
தற்போது முதல் அணு உலை இயக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகி விட்டதால் பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக முதல் அணு உலையை ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது.

பராமரிப்புப் பணி...
இதுகுறித்து வாளக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி ஒரு ஆண்டு முடிவடைந்து விட்டதால், ஒரு ஆண்டுக்குள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சர்வதேச அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் விதி்முறையாகும்.

பரிசோதனை...
இதனால் முதல் அணு உலை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டு அணு உலை கட்டு மானத்தின் உறுதி, அழுத்த தன்மை ஆகியவை பரிசோதனை செய்யப்படும். இதற்காக ஒரிரு வாரத்தில் அணு உலை மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications