கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கத்தில் பவர் வந்தாச்சு!
சென்னை: புயலால் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசியது. பேய்க்காற்றால் சென்னையில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்வினியோகம் நேற்றே நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை இருளில் மூழ்கியது. மின் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மின்வினியோகம் இன்று மதியம் அல்லது மாலை சீர் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், உயர்நீதிமன்றம், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.
பிற பகுதிகளிலும் மின் வினியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications