நரபலி புகார்... பி.ஆர்.பி. தரப்பைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸ் விசாரணை
மதுரை: நரபலி கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் இன்று காலை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட நிலையில் இரண்டு பேர் மட்டுமே விசாரணைக்கு வந்திருந்தனர்.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் உள்ள பி.ஆர்.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் குழந்தை உள்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முன்னிலையில் இவை தோண்டி எடுக்கப்பட்டன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படவுள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அழகு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி பி.ஆர்.பழனிச்சாமி, ஜோதிபாசு, ஐயப்பன், பரமசிவன் ஆகிய 4 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
இன்று காலை அவர்கள் கீழவளவு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்மனில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் முற்பகல் 11.0 மணி வரை யாருமே வரவில்லை. பி.ஆர். பழனிச்சாமி நேரில் வருவார் என்று அவரது தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதையடுத்து மற்ற 3 பேரும் ஒரு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் உத்தரவு போனது. இதையடுத்து ஜோதிபாசு, ஐயப்பன் ஆகியோர் விசாரணைக்கு வந்தனர்.
அவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி மாரியப்பன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. மற்ற இருவரும் இன்று மாலைக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications