நரபலி புகார்... பி.ஆர்.பி. தரப்பைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸ் விசாரணை
மதுரை: நரபலி கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் இன்று காலை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட நிலையில் இரண்டு பேர் மட்டுமே விசாரணைக்கு வந்திருந்தனர்.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் உள்ள பி.ஆர்.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் குழந்தை உள்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முன்னிலையில் இவை தோண்டி எடுக்கப்பட்டன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படவுள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அழகு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி பி.ஆர்.பழனிச்சாமி, ஜோதிபாசு, ஐயப்பன், பரமசிவன் ஆகிய 4 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
இன்று காலை அவர்கள் கீழவளவு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்மனில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் முற்பகல் 11.0 மணி வரை யாருமே வரவில்லை. பி.ஆர். பழனிச்சாமி நேரில் வருவார் என்று அவரது தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதையடுத்து மற்ற 3 பேரும் ஒரு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் உத்தரவு போனது. இதையடுத்து ஜோதிபாசு, ஐயப்பன் ஆகியோர் விசாரணைக்கு வந்தனர்.
அவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி மாரியப்பன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. மற்ற இருவரும் இன்று மாலைக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications