சென்னைக்குள் பிஆர் பாண்டியன் வாகன பேரணி நுழைய தடை-பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுப்பு
பி.ஆர்.பாண்டியன் வாகன பிரச்சார பயணம் சென்னையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பி.ஆர்.பாண்டியனின் இரு சக்கர வாகன பயணம் சென்னையில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளதுடன், அவரது பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன் கடந்த 25-ம் தேதி முதல் வேதாரண்யத்திலிருநது இரு சக்கர வாகனம் பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க வலியுறுத்தியும் நடைபெற்றுவரும் இந்த பிரச்சார பயணத்தை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர பிரச்சார பயணம் நாகை, திருவாரூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்று இன்று சென்னையை அடைகிறது.

சமீபத்தில், சென்னையில் பொதுக்கூட்டங்களை நடத்திகொள்ள போலீசார் பட்டியலை வெளியிட்டதுடன், சென்னை நகரின் மிக முக்கிய இடங்களுக்கு தடை விதித்தும் இருந்தனர். அப்போது பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பி.ஆர்.பாண்டியனின் பிரச்சார பயணத்திற்கு சென்னைக்குள் நுழைய சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. அத்துடன் பி.ஆர்.பாண்டியனின் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான், உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications