எல்.இ.டி. 'பல்பு' பஞ்சாயத்தை விடாமல் தூக்கிபிடிக்கும் பிரகாஷ் ஜவடேகர்....
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை; 'உஜாலா' எல்.இ.டி. பல்பு திட்டத்தை தமிழகம் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தமிழகம் வரும்போதெல்லாம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கையிலெடுத்துக் கொண்டு விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நள்ளிரவு சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் சேர உள்ளன.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறியிருப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்பது சரியல்ல. ஒரு முதல்வர் குறித்து அரசியல் ஆதாயத்திற்காக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பியூஷ் கோயலுக்கு தமிழகத்தில் கிடைத்த அனுபவம் குறித்து அவர் சொல்லி இருக்கிறார். இது தவறில்லை. அது உண்மை.
மத்திய அரசு ‘உதய்' உஜாலா திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இதை தமிழக அரசு எதிர்ப்பது சரியானது அல்லது. இது ஒரு நல்ல திட்டம். இத்திட்டம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெரும் திட்டம் ஆகும்.
தமிழகத்தில் மின்துறையால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசின் இந்த உதய் திட்டம் மூலம் தடுத்திருக்க முடியும்.
உஜாலா திட்டம்....
‘உஜாலா' திட்டத்தின் மூலம் எல்.இ.டி. விளக்குகள் வெளிமார்க்கெட்டில் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.200 ஆக குறைந்துள்ளது. அதிலும் மாநில அரசுக்கு ரூ.100 விலைக்கு மத்திய அரசு வழங்குகிறது. அப்படியிருந்தும் தமிழக அரசு அந்த திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. அதற்கு மாறாக அரசை விட கூடுதல் விலைக்கு விற்பவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசுக்கு விருப்பமில்லை.
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க 6 மாநிலங்களில் இருந்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு 5 மாநிலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்த நிலையில், தமிழகம் மட்டும் அறிக்கையை சமர்பிக்கவில்லை.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
பின்னர் இன்று சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜூலு, இல.கணேசன், வானதி சீனிவாசன், நரேந்திரன், கே.டி. ராகவன், கருப்பு முருகனாந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications