கொடுமையைப் பாருங்க.. கமல், ரஜினி, விஷால் சேர வேண்டுமாம்.. சொல்வது பிரகாஷ் ராஜ்!
நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சென்னை: நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரின் மனு தாக்கல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அதன்பின் கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட போவதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21ல் இருந்து கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறினார்.
இந்த நிலையில் இவர்கள் மூன்று பேர் குறித்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். தனியார் பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் பேசி உள்ளார்.
அதில் ''நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும்'' என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெங்களூரில் சில நாட்களுக்கு முன் நடந்த பத்த்ரிக்கையாளர் சந்திப்பில் ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது.'' பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications