கொடுமையைப் பாருங்க.. கமல், ரஜினி, விஷால் சேர வேண்டுமாம்.. சொல்வது பிரகாஷ் ராஜ்!
நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சென்னை: நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரின் மனு தாக்கல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதன்பின் கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட போவதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21ல் இருந்து கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறினார்.
இந்த நிலையில் இவர்கள் மூன்று பேர் குறித்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். தனியார் பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் பேசி உள்ளார்.
அதில் ''நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும்'' என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெங்களூரில் சில நாட்களுக்கு முன் நடந்த பத்த்ரிக்கையாளர் சந்திப்பில் ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது.'' பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.