மாமியார் சொன்ன அந்த வார்த்தை! நெஞ்சில் ஈட்டியாக குத்திய சம்பவம்! 4 மாத கர்ப்பிணி விபரீதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாமியார் அவதூறாக பேசியதால் மன உடைந்த 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அப்போது நந்தினிக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்ததும் இருவரின் பெற்றோர்களும் அவர்களை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் வசித்தனர். இவர்களுடன் குருநாதனின் தாயும் வசித்து வந்தார். இந்த நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவரை மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நந்தினி, தனது தாய் மீனாவிடம் அழுதுக் கொண்டே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நந்தினியின் தாய் மீனா அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமியார் காஞ்சனாவிடம் விசாரணை நடத்துமாறு நந்தினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நந்தினியை மாமியார் என்ன சொன்னார் என தெரியவில்லை, ஒரு வேளை குழந்தையை தவறாக பேசினாரா, இல்லை நந்தினியின் கேரக்டரை சிதைத்து பேசினாரா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications