மாமியார் சொன்ன அந்த வார்த்தை! நெஞ்சில் ஈட்டியாக குத்திய சம்பவம்! 4 மாத கர்ப்பிணி விபரீதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாமியார் அவதூறாக பேசியதால் மன உடைந்த 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அப்போது நந்தினிக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்ததும் இருவரின் பெற்றோர்களும் அவர்களை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் வசித்தனர். இவர்களுடன் குருநாதனின் தாயும் வசித்து வந்தார். இந்த நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவரை மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நந்தினி, தனது தாய் மீனாவிடம் அழுதுக் கொண்டே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நந்தினியின் தாய் மீனா அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமியார் காஞ்சனாவிடம் விசாரணை நடத்துமாறு நந்தினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நந்தினியை மாமியார் என்ன சொன்னார் என தெரியவில்லை, ஒரு வேளை குழந்தையை தவறாக பேசினாரா, இல்லை நந்தினியின் கேரக்டரை சிதைத்து பேசினாரா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications