அவதூறு வழக்கில் முன் ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் பிரேமலதா மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர் போலீசார் பதிவு செய்துள்ள அவதூறு கிரிமினல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை வரும் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டசபை தேர்தலை யொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Premalatha moves HC for anticipatory bail

நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக் கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

தேமுதிகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற் காக உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+