தன்னம்பிக்கையின் மறு பெயர் எது தெரியுமா?... "பிரேமலதா விஜயகாந்த்"!
தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் நியாயமாக தேர்தல் நடந்தால் தேமுதிகதான் வெற்றி பெரும் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் நியாயமாக தேர்தல் நடைபெற்றால் தேமுதிக வெல்வது உறுதி என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற இருந்த அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏ சீனிவேலு மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட காலி இடத்திற்கும் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இறுதியாக, இந்த 3 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த 3 தொகுதிகளிலும், அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக படுதோல்வி அடைந்ததையடுத்து, அந்தக் கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நடைபெறும் இந்த 3 தொகுதி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது என்று முடிவு செய்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முத்துவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். தளவாய்பாளையம், வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளதாக பிரேமலதா குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் நியாயமாக நடந்தால் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும் என்றும் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications