மோடியும் பறக்கிறார், ஜெ.வும் பறக்கிறார், அப்புறம் எப்படி மக்களின் நிலை தெரியும்?: பிரேமலதா
தர்மபுரி: முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் தமிழக சாலைகளில் பயணம் செய்தால் தானே அவர்களுக்கு மக்களின் நிலைமை என்னவென்பது தெரியும் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பாஸ்கரை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். மேலும் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோவேந்தனுக்காக அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் தமிழக சாலைகளில் பயணம் செய்தால் தானே அவர்களுக்கு மக்களின் நிலைமை என்னவென்பது தெரியும். இருவருமே விமானத்தில் பறக்கிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் கலர் பொடிகள் கலக்கப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சத்துணவு காய்கறிகள் அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications