சூடு பிடிக்கும் தேர்தல் களம்... பிரசாரத்தை நெல்லையில் இருந்து துவங்குகிறார் பிரேமலதா
சென்னை: தேமுதிக மகளிர் அணி தலைவி தனது முதல் தேர்தல் பிரசாரமான தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தை நாளை நெல்லையப்பர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறார்
தமிழக அரசியலில் விஜயகாந்த் எந்த கூட்டணியில் இடம்பெறுவார் என்ற குழப்பம் சமீப காலமாக நிலவி வந்த சூழ்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கூட்டணி முடிவான கையொடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க தேமுதிக தயார் ஆகிவிட்டது. அதன்படி தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 4-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டம் நடைபெறும் நாள், மாநகராட்சிகளின் விவரம் வருமாறு:-
25-ந்தேதி திருநெல்வேலி மாநகராட்சி, 26-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி, 27-ந் தேதி மதுரை மாநகராட்சி, 28-ந் தேதி தஞ்சாவூர் மாநகராட்சி, 29-ந் தேதி திருச்சி மாநகராட்சி, 30-ந் தேதி திண்டுக்கல் மாநகராட்சி, 31-ந் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சி.
ஏப்ரல் 1-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி, 2-ந் தேதி ஈரோடு மாநகராட்சி, 3-ந் தேதி சேலம் மாநகராட்சி, 4-ந் தேதி வேலூர் மாநகராட்சி ஆகிய இடங்களில் தினசரி மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications