For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம் l குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை..

    சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சரியாக 10.30 மணியளவில் வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    President Ram Nath Govind coming to Tamilnadu today

    இன்று காலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடக்கும் நூற்றான்டு விழாவில் கலந்து கொள்வார். சென்னை வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்ல இருக்கிறார். வேலூரில் விழா முடிந்த பின் மீண்டும் அவர் சென்னை வருவார்.

    சென்னையில் அவர் ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கிறார். இந்த இரண்டு நாள் பயணம் முழுக்க அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நாளை (மே 5) சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். இடைப்பட்டநேரத்தில் அவர் புதிய அரசு கட்டிடங்கள் சிலவற்றை திறந்து வைப்பார் என்றும், தங்க கோவிலில் தரிசனம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    நாளை 1.30 மணி அளவில் அவர் மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார். அவரது பாதுகாப்பிற்காக 3,500 போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    English summary
    President Ram Nath Govind coming to Tamilnadu today. He will participate in some of the college function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X