அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க ஜனாதிபதி ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் ஊழியர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த தீர்மானம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கான அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலும், பணியாளர்கள் நியமனம், சேர்க்கை உள்ளிட்டவற்றில் அரசு நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications